states

img

ஆந்திராவில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த நாளில் இருந்து கடத்  தல் சம்பவங்கள் மிக மோசமான அள வில் அரங்கேறி வரும் நிலையில், கடப்பா  நகரின் காந்தி சிலை அருகே நடை பெற்ற வாகன சோதனையில் பி.கே.எம்.  தெருவை சேர்ந்த தேஷ்முக் பாரதிராஜா ராவ் (41) ஆவணம் இல்லாமல் தங்க கட்டி களுடன் பிடப்பட்டார். பறிமுதல் செய் யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்புரூ.5 கோடி (1 கிலோ 560 கிராம் எடை) என்ற  நிலையில், தங்க கட்டிகளையும் தேஷ்  முக் பாரதிராஜாராவையும் போலீசார் திருப்பதி வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த தங்க கட்டிகள்  எப்படி கிடைத்தது? இதை கொடுத்த வர்கள் யார்? எங்கு கொண்டு செல்லப்படு கிறது? வியாபாரி என்றால் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்றதற்கான உண்  மையாக காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் வரித்துறையினர் விசா ரித்து வருகின்றனர்.